Nenjathu Neruppu
Nenjathu Neruppu
நாம் பிறந்த தாய்மண்ணின் நிலையை, மக்களின் அவல வாழ்க்கைச் சூழ்நிலையை மனதில் எண்ணி, வாடாத தமிழர் தமிழரல்லர், அதை எழுதாத கவிஞர் கவிஞரல்லர்.
ஆனால், அந்த இரண்டையும் இலட்சியக் கருவோடு உள்வாங்கிய பலரிடையே பொன்னண்ணாவும் ஒருவர்.
அவர் அத்துடன் நின்று விடவில்லை.
நாடொன்றின் அல்லது இனமொன்றின் விடியலுக்கு முக்கியமானவை இரண்டு:
ஒன்று தலைமை, மற்றையது ஒற்றுமை.
தலைமை தானாகவே ஈழத்தமிழருக்கு. உலகறிய உருவாகி விட்டது.
ஆனால் ஒற்றுமை இன்னும், கேள்விக்குறியே!?
அதனை தனது அனுபவத்தால் நன்குணர்ந்த விஞரின் கவி வரிகள் நேர்வழி உரைக்கின்றன.
கவிஞர்
க. இராஜமனோகரன்
இலண்டன்-